திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த தனசேகர் என்பவர் தனது இரு மனைவிகளோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.
முன்னாள் உள்ளாட்சி தலைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவிகளான செல்வி வழூர் கிராமத்திலும், காஞ்சனா கோவில் குப்பத்திலும் கிராமத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இரண்டு மனைவிகளும் வெற்றி பெற்றதில் தனசேகர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்தார்.